Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிரியா கிளர்ச்சியில் இதுவரை 60,000 பேர் மரணம்: ஐ.நா தகவல்

Subscribe to Oneindia Tamil

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரில் 2012ம் ஆண்டு முடிவு வரை 60,000 கும் மேற்பட்டோர் வரை உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

சிரியா அதிபர் ஆசாதிற்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போராட்டம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் தினசரி நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர்.

2011-ம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்டோர்கள் பற்றிய விவரங்களை ஐ.நா. அமைப்பால் தெரிவிக்க முடியவில்லை. ஆனால் இதுவரை 60000-க்கும் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் கடந்த நவம்பர் மாதம் வரை 59,648 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன. 2013-ம் ஆண்டு தொடக்கம் வரை 60,000-க்கும் மேற்பட்டோர் அங்கு கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிரியா உள்நாட்டுப்போரின் தொடங்கியதிலிருந்து இதுவரை கிடைத்த தகவல்களை பார்க்கிறபோது அங்கு கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 1000 பேரிலிருந்து, 5,000 பேராக அதிகரித்து இருக்கிறது." என நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+