பலாத்கார குற்றங்களுக்கு பீகார் மாநிலத்தவரே காரணம்: ராஜ்தாக்கரே கருத்துக்கு லாலு கண்டனம்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு பீகாரிகளே காரணம் என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியதற்கு ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்தாக்கரே, இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்க பீகார் மாநிலத்தவர்களே காரணம் என்று கூறியிருந்தார்.
ராஜ்தாக்கரேவின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிம் பேசிய ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராஜ்தாக்கரே குடும்பத்தினருக்கு அரசியல் நடத்த வேறு காரணம் கிடைக்கவில்லை. தவறு எங்கு நடந்தாலும் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டும். மொழிவாரி அரசியல் என்பது நாட்டுக்கு நல்லது அல்ல. நாடு வளர்ச்சியடைய பீகார் மாநில மக்களே காரணம் என்றார்.












Click it and Unblock the Notifications