அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்….
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தில் இருந்த டீசல் டேங்க் கழன்றதால் பயணிகள் பீதியில் அலறினர்.
கொல்லங்கோட்டியிலிருந்து நாகர்கோவிலுக்கு அரசுப்பேருந்து இன்று காலை வந்தது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி முன் பஸ் வந்தபோது, திடீரென பேருந்தில் இருந்த டீசல் டேங்கு கழன்றது. உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார்.
டீசல் டேங்கு சாலையில் உரசியபடி சிறிது தூரம் வந்ததால் பேருந்து எங்கே வெடித்து விடுமே என்ற அஞ்சிய பயணிகள் அலறினார்கள். போட்டனர். பேருந்தை நிறுத்திய உடன் அவசரம் அவசரமாக பயணிகள் பேருந்தை விட்டு கீழே இறங்கினர். இதனையடுத்து அனைவரும் மாற்றுப்பேருந்து மூலம் வடசேரி பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் மெக்கானிக் வரவழைக்கப்பட்டு டீசல் டேங்கு சரி செய்யப்பட்டு பொருத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.