அடுத்த கொடூரம்... சீக்கியரைக் கடத்தி தலையைத் துண்டித்துக் கொன்ற பாக். தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தால், 2 இந்திய வீரர்கள் கொலை செய்யப்பட்டதும், ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் வசித்து வந்த ஒரு சீக்கியரைக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அவரைத் தலையைத் துண்டித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

அவரது பெயர் மொஹீந்தர் சிங். 40 வயதான இவர் மருந்து வியாபாரி ஆவார். கைபர் பழங்குடியினப் பகுதியில்உள்ள தப்பாய் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். இவரை நவம்பர் 20ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதக் கும்பல் கடத்திச் சென்றது. பின்னர் அவரைத் தலையைத் துண்டித்துக் கொலை செய்து உடலையும், தலையையும் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.

அவரது உடலும் சிதைக்கப்பட்டுள்ளது. ஒரு சாக்குப் பையில் உடல் கிடந்தது. அதிகாரிகள் அதைக் கைப்பற்றிவிசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கொலைக்கு தவ்ஹீதுல் இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். லஷ்கர் இ இஸ்லாம் என்ற போட்டி தீவிரவாத அமைப்புக்கு உளவு பார்த்ததால் மொஹீந்தர் சிங்கைக் கொன்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தக் கொடூரக் கொலையால் சிறுபான்மை சீக்கிய சமுதாயத்தினர் பெரும் வேதனை அடைந்துள்ளனர். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் சீக்கியர்கள் கணிசமாக வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+