எல்லையில் ராணுவ வீரர்கள் படுகொலை- ஜனாதிபதியுடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இரு இந்திய ராணுவத்தினர் கோரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மேலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தானுடன் சுமூக உறவுக்கு வாய்ப்பில்லை என்றும் கூறியிருந்தார்.
இதன் பின்னர் மாலை 5 மணியளவில் ராஷ்டிரபதி பவனுக்கு சென்ற பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் நீடித்து வரும் பதற்றம் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications