டீசல் விலை உடனே உயர்வு- 45 காசுகள் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துகொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் ஒட்டுமொத்தமாக விலையை உயர்த்தாமல் மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்தலாம் என்றும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 45 காசுகள் உயர்த்தப்படுகிறது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.
இதனால் டெல்லியில் டீசல் விலை 50 காசு, கொல்கத்தாவில் 53 காசு, சென்னையில் 55 காசுகள் உயர்ந்துள்ளன.
இதனிடையே பெட்ரோல் விலையில் 25 காசுகள் குறிஅக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications