சிறை நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரி மத்திய சிறையில் 150 கைதிகள் உண்ணாவிரதம்
புதுச்சேரி: விசாரணைக் கைதியை பரோலில் விட மறுத்த சிறை நிர்வாகத்தைக் கண்டித்து புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாரணைக் கைதி ஒருவரின் தந்தை மரணத்துக்கு, கைதியை பரோலில் விட சிறை நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் விசாரணைக் கைதிகள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
சிறை நிர்வாகத்தைக் கண்டித்தும் விசாரணைக் கைதிகளுக்கு உள்ள உரிமையை வலியுறுத்தியும் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் சிறை வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏற்கனவே சிறைச்சாலைக்கு வரும் பார்வையாளர்களை தடுத்ததை கண்டித்து சிறைக்கைதிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இதேபோல் பலமுறை புதுச்சேரி மத்திய சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications