Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அல்ஜீரியாவில் 792 பிணயக்கைதிகள் மீட்பு: 32 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

அமீனாஸ்: அல்ஜீரியாவில் அல் கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் பலரை பிணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையை அந்நாட்டு ராணுவம் தாக்கயதில் 23 வெளிநாட்டவர்கள், அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 32 தீவிரவாதிகள் பலியாகினர்.

அல் கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் கடந்த 16ம் தேதி அல்ஜீரியாவின் அமீனாஸ் பகுதி சகாரா பாலைவனத்தில் அமைந்துள்ள பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலையை தாக்கி அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பிணயக் கைதிகளாகப் பிடித்தனர். பக்கத்து நாடான மாலியில் ஜிகாத் இயக்கத்தில் பிரான்ஸ் ராணுவத்தின் தலையீடு இருக்கக் கூடாது என்பதே அவர்களின் கோரிக்கை.

பொறுத்துப் பார்த்த அல்ஜீரிய ராணுவம் நேற்று அந்த ஆலையைத் தாக்கியது. இதில் 32 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முன்னதாக ராணுவம் 11 தீவிரவாதிகளைக் கொன்றவுடன் பதிலுக்கு தீவிரவாதிகள் 7 பிணயக்கைதிகளை கொன்றுவிட்டனர். ராணுவத்தினர் ஆலையில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 685 அல்ஜீரிய தொழிலாளர்கள் மற்றும் 107 வெளிநாட்டவர்களை காப்பாற்றினர்.

ஆனால் நேற்றைய தாக்குதலில் 23 வெளிநாட்டவர்கள், அல்ஜீிரயர்கள் உயிர் இழந்துள்ளனர். இறந்தவர்களில் இங்கிலாந்து, பிரான்ஸ், ரோமானியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் அடக்கம். அந்த ஆலையில் இருந்த ஜப்பானியர்கள் உள்பட பலர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+