சென்னைக்கு ஆகஸ்ட் வரை கூடுதலாக கிருஷ்ணா நதி நீர்: ஆந்திரா உறுதி
Subscribe to Oneindia Tamil

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. போதுமான மழை இல்லாததால் இந்த ஏரிகளுக்கான நீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. தற்போது ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் மட்டும் பூண்டி ஏரிக்கு வருகிறது. ஜீரோ பாயிண்டில் இருந்து தினமும் 160 கன அடி தண்ணீர் பூண்டிக்கு வருகிறது.
தற்போது வரும் கிருஷ்ணா நீரை அதிகரித்து தருமாறு தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கு ஆந்திர அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்து 160 கனஅடியில் இருந்து 300 கனஅடியாக தண்ணீரை கூடுதலாக ஆகஸ்ட் மாதம் வரை திறந்துவிட நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்தார்












Click it and Unblock the Notifications