அணு மின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி இடிந்தகரையில் போராட்டக்காரர்கள் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி தேசிய மீனவர் பேரவை அமைப்பு சார்பில் இந்தியா முழுவதும் கடற்கரை கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டக்குழு சார்பில் இடிந்தகரையில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட இடிந்தகரை, கூத்தக்குழி, உவரி, பெருமணல் போன்ற மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
உண்ணாவிரதத்தின் போது உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும், நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மீனவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும், மத்திய அமைச்சரவையில் மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய மீனவர் பேரவை சார்பில் இந்தியா முழுவதும் கடற்கரை கிராமங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து இடிந்தகரையில் நாங்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications