டெல்லியில் கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவி இறுதியாண்டு தேர்வில் 73% மார்க் வாங்கியுள்ளார்
டேராடூன்: டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவி இறுதியாண்டு தேர்வில் 73 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் பிசியோதெரபி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலும் பின்னர் சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த டிசம்பர் 29ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்தார்.
டேராடூனில் உள்ள சாய் இன்ஸ்டிடியூட்டில் பிசியோதெரபி படித்த அந்த மாணவி எழுத்து தேர்வுகளை முடித்துவிட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெறச் சென்றபோது தான் அந்த கொடூரச் சம்பவம் நடந்தது. 4 ஆண்டு கால படிப்பில் இறுதியாண்டு தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் இறந்த மாணவி 1100க்கு 800 மதிப்பெண்கள் அதாவது 73 சதவீதம் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
முந்தைய தேர்வுகளில் 55 முதல் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்ற அவர் இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியுள்ளார் என்று அவரது பேராசிரியர் ஹரிஷ் அரோரா தெரிவித்தார்.
அவர் நான்கு ஆண்டுகள் படிக்க ரூ.1,80,000 கட்டணம் செலுத்தியுள்ளார். டேராடூனில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் நடக்கும் விழா ஒன்றில் வைத்து அவரது கல்வி கட்டணத் தொகையை அவரது குடும்பத்திடம் திருப்பிக் கொடுக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒரு வேளை அவர்கள் பணத்தை வாங்க மறுத்தால் அந்த தொகை ஏழைப் பெண்களை படிக்க வைக்க பயன்படுத்தப்படும் என்று பேராசிரியர் ஹரிஷ் அரோரா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications