Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களிடம் பார்த்துப் பழகு, கரடி பொம்மை வாங்கிக் கொடு: எரித்துக் கொல்லப்பட்ட மாணவி கடிதம்

Subscribe to Oneindia Tamil

Girl
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரியில் எரித்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி எழுதிய 40 பக்கக் கடிதம் போலீஸிடம் சிக்கியுள்ளது. இந்தக் கடிதத்தை மாணவியின் தோழி போலீஸில் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், போலீஸார், கொல்லப்பட்ட மாணவியின் காதலரைப் பிடித்து விசாரித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கோட்டைகாட்டுபுதூரை சேர்ந்தவர் நல்லசிவம். அவருடைய மனைவி லோகநாயகி. இவர்களுடைய மகள்கள் ரூபினி, நந்தினி (19). நந்தினி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார்.

கடந்த 20-ந் தேதி கோவை செல்வதற்காக சிவகிரி பஸ்நிலையம் சென்றார். பின்னர் கோவைக்கு சென்றுவிட்டதாக தந்தைக்கு செல்போனில் தகவல் கூறினார். இந்தநிலையில் நந்தினி கடந்த திங்கட்கிழமை காலை சிவகிரியில் சாலையோரமாக எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

நந்தினியின் உடலில் வெட்டு காயங்கள் எதுவும் இல்லை என்பதும், ஆனால் அவரது உடலின் பின்பகுதி எரிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மாணவி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டங்களும் வெடித்தன. அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. சிவகிரியில் நேற்று கடையடைப்பும் நடந்தது.

இந்த நிலையில், நந்தினி தனது தோழி ஒருவருக்கு பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த மாணவியைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து பார்சல் பிரிக்கப்பட்டது. அதில் நந்தினி எழுதிய 40பக்கங்களுக்கும் மேலான கடிதம் ஒன்று இருந்தது. அதில் கபிலன் என்பவரை காதலித்தது குறித்து நந்தினி குறிப்பிட்டிருந்தார்.

அக்கடிதத்தின் முழுவிவரத்தையும் போலீஸார் தெரிவிக்கவில்லை. ஆனால் அதில், கபிலன் நீ பெண்களிடம் பார்த்து பழகு, நான் வானத்தில் நட்சத்திரமாக இருந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். எனது தோழிகள் எனக்கு 4 ஆயிரம் ரூபாய் தர வேண்டியுள்ளது. அந்த பணத்தை வாங்கி எனக்கு பிடித்தவர்களுக்கு கரடி பொம்மை வாங்கி கொடு என்று கூறியிருந்தார் நந்தினி என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

கபிலனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது ஆரம்பத்திலிருந்தே நான் நந்தினியைக் காதலிக்கவில்லை. ஆனால் அவரது தொடர் வற்புறுத்தலால் காதலிப்பதாக கூறினேன். ஆனாலும் கூட பின்னர் காதலை முறித்துக் கொண்டேன். அதன் பிறகு நண்பர்களாகப் பழகி வந்தோம் என்று கூறினார். மேலும் கொலை நடந்தபோது கபிலன் கல்லூரி விடுதியில் இருந்ததும் உறுதியாகியுள்ளது. எனவே போலீஸாருக்கு இந்த வழக்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கபிலன் - நந்தினியின் நட்பை விரும்பாத அல்லது இவர்களின் முந்தைய காதலால் பாதிக்கப்பட்ட பெண் யாராவது இந்தக் கொலையைச் செய்திருக்கலாமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+