ஹெட்லிக்கு இன்று தண்டனை அறிவிப்பு- 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வலியுறுத்தல்

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தினர். இதில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவத்தில் அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு பிடிபட்டான். அவன் அண்மையில் தூக்கிலிடப்படான்
இந்த தாக்குதலுக்குமூளையாக செயல்பட்டதாக அமெரிக்க வாழ் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹெட்லி மற்றும் கனடாவின் ராணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஹெட்லி மீது 2010-ம் ஆண்டு மார்ச் 18-ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ராணா மீது 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் குற்றச்சாட்டுபதிவு செய்யப்பட்டது.
இவர்கள் இருவர் மீதான வழக்கு அமெரிக்காவின் சிகாகோ மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கினை நீதிபதி ஹாரி லெனின்வெப்ர் விசாரித்து வருகிறார். அண்மையில் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று ஹெட்லிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது. ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.












Click it and Unblock the Notifications