மீண்டும் மீண்டும் 'செளத் பார்க்' படத்தை பார்க்க நிர்பந்திக்கப்பட்ட சதாம் ஹூசேன்!

இந்தப் படத்தில் நரகத்தில் வாழும் சாத்தானின் காதலனாக சதாம் ஹூசேனைக் காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்கக்கது. இந்தப் படத்தில் சாத்தானாலேயே சதாம் கொல்லப்படுவது போன்ற காட்சிகளும் உண்டு.
பூமியில் காட்டு மாடுகளால் கொல்லப்பட்டு நரகத்துக்கு வரும் சதாமுக்கும் சாத்தானுக்கும் காதல் ஏற்படுவது மாதிரியும், அங்கே அவரை சாத்தானே கொல்வது மாதிரியுமான படம் இது. கிராபிக் படமானாலும் கூட இந்தப் படம் 'ஆர் ரேட்டிங்' செய்யப்பட்ட ஒன்றாகும் (கிட்டத்தட்ட பலான படம் என்று சான்றிதழ் பெற்றது)
இந்தப் படத்தை சதாம் தூக்கில் போடப்படுவது வரை அவரை பலமுறை பார்க்கச் செய்துள்ளனர் அமெரிக்கப் படையினர் என்கிறார்கள்.
இது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. சதாம் அணு குண்டு வைத்திருப்பதாகச் சொல்லித் தான் இராக் மீது படையெடுத்தார் அப்போதைய அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ். ஆனால், அது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பதும், அங்கு அணுகுண்டுகளே இல்லை என்பதும், போருக்காக புஷ் செய்த தந்திரம் என்பதும் பின்னர் தெரியவந்தது.
இந் நிலையில் எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் போர்க் கைதிகளை நடத்த சர்வதேச விதிமுறைகள் உண்டு. ஆனால், அந்த சட்டங்களை மீறி சதாமை இந்தப் படம் பார்க்க வைக்க அமெரிக்கப் படைகள் நிர்பந்தம் செய்தது உண்மையானால், அது மிக கீழ்த்தரமான செயலாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications