’பாகிஸ்தானுடன் நட்பாக இருக்கவே விரும்புகிறோம்.. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குடியரசு தின உரை!

64 வது குடியரசு தின விழாவையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையின் முக்கிய அம்சங்கள் :
நாடு பல நூற்றாண்டுகளில் பெறாத வளர்ச்சியை கடந்த 60 ஆண்டுகளில் பெற்றுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் மும்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. பெருமளவில் கலாச்சார மாற்றம் நிகழ்ந்துள்ளது. வறுமையின் தீவிரம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் நமது நாட்டின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நீதி, நியாயம், சமத்துவம் என்ற கொள்கையின் அடிப்படையில் நாடு அமைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் பங்கு
பொருளாதார வளர்ச்சியில் அனைவருக்கும் பங்கு கிடைக்க வேண்டும். வறுமை, கல்வியின்மையை ஒழிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேணடும். ஏழைக்கு வளர்ச்சியில் பங்கு கிடைக்கவில்லை என்றால் நக்சல் தீவிரவாதம் தலைதூக்கும். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நிலைமை கையை மீறிச் சென்றுவிடும். சில மாநிலங்களில் நக்சல்களின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது. அவர்களை எதிர் நோக்குவது பெரும் சவாலாக உள்ளது.
பெண்கள் சம உரிமை
பெண்களுக்கு எதிரான கொடுமை , சமூகத்திற்கு எதிரான கொடுமையே, பெண்கள் சம உரிமையை புறக்கணிக்க முடியாது. டில்லியில் நடந்த மாணவி பாலியல் கொடுமை சம்பவம் நமது மனதில் நீங்காத துயரத்தில் ஆழ்த்திவிட்டது. இதனால் இளைய தலைமுறையினர் கொதிப்படைந்துள்ளனர்.
பாகிஸ்தானுடன் நட்பு
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடந்த சம்பவத்திற்கு பின்னரும் , பாகிஸ்தானுடன் நட்பு நாடாக இருக்கவே இந்தியா விரும்புகிறது. அதற்காக பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டு பாகிஸ்தான் நட்பாக இருப்பதாக நடிப்பது கவலை அளிக்கிறது.
நாட்டில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும். போன்ற பல முக்கிய அம்சங்கள் ஜனாதிபதி உரையில் இடம் பெற்றிருந்தன.












Click it and Unblock the Notifications