கர்நாடகா முதல்வர் ஷெட்டர் அரசுக்கு ஆபத்து இல்லை- நம்பிக்கை வாக்கெடுப்பும் தேவையில்லை: ஆளுநர் பரத்வாஜ
பெங்களூர்: கர்நாடகா மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆளுநர் பரத்வாஜோ, அரசுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று அதிரடியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எதியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 13 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து ஆளுநர் பரத்வாஜிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு ஆளுநர் உத்தரவிடக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆளுநர் பரத்வாஜ், 13 எம்.எல்.ஏக்கள் என்னிடம் கொடுத்த ராஜினாமா கடிதங்களை ஆளும் சட்டசபை கட்சித் தலைவரான முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் கொடுத்துவிட்டேன். அவர்தான் இறுதி முடிவுக்க வேண்டும். வரும் 4-ந் தேதி சட்டசபையைக் கூட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது 13-ந் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்ளவில்லை. 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்திருப்பதால் ஷெட்டர் அரசுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications