விவசாயி தற்கொலை: ரூ.10 லட்சம் நிவாரணம் கேட்டு மதிமுகவினர் சாலை மறியல்
கோவில்பட்டி: நெல்லை மாவட்டம் கோவில்பட்டி அருகே தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கேட்டு மதிமுக வினர் கோவில்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி அடுத்த வரகனூரைச் சேர்ந்த ஜெகந்நாதன் என்ற விவசாயி, விவசாயக் கடனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி ஜெகநாதன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பிறகு வாங்க மறுத்த குடும்பத்தினரும் , உறவினர்களும் தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ் .ஜோயல் தலைமையில் கோயில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் , நெல்லை மாவட்டச் செயலாளர் ப.ஆ.சரவணன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைகுமார் ,மற்றும் இணையதள ஒருகினைப்பாளர் மின்னல் முகமதுஅலி , மாணவர் அணிச் செயலாளர் தி.மு.ராசேந்திரன் , ரமேஷ் , விநாயகா ரமேஷ் , உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்டோர் முன்பு மறியலில் பங்கேற்றனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டோருடன் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன், பேச்சுவார்த்தை நடத்தினர். வடகனூர் என்பது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தது என்பதால் நெல்லை மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறை அதிகாரிகளிடமும் கூறி கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும் என்றும், அதுவரை போராட்டத்தைக் கைவிடுமாறும் கூறினார்.
இதையடுத்து சாலை மறியலை மதிமுகவினரும் உறவினர்களும் கைவிட்டனர். சடலத்தை எடுத்துச் சென்ற உறவினர்கள் பின்னர் இறுதிச்சடங்கினை செய்து அடக்கம் செய்தனர்.












Click it and Unblock the Notifications