ஊழலுக்கு காரணம் எஸ்.சி, எஸ்டி, பி.சி மக்களே... பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் ஆசிஷ் நந்தி!
டெல்லி: நாட்டின் ஊழலுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் காரணம் என்ற சர்ச்சை பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் சமூகவியலாளர் ஆசிஷ் நந்தி.
ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் பேசிய ஆசிஷ் நந்தி, ஒடுக்கப்பட்ட மக்கள்தான் ஊழலுக்குக் காரணம் என்று பேசியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் கண்டன அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நீங்கள் புரிந்து கொண்டிருக்கும் கருத்து நான் சொல்ல விரும்பியது அல்ல. இந்தியாவில் ஊழல் என்பது ஒரு சரிசெய்யப்பட வேண்டிய முக்கியப் பிரச்னை என்பது குறித்துப் பேசினேன். இந்தியாவில் ஊழலற்ற சமுதாயம் உருவானால் மட்டுமே சமுதாயம் மேன்மை பெறும் என்பதை நம்புகிறேன்.
தலித்கள், பழங்குடியினர், பிற்பட்டோர் ஆகியோர் ஊழல் புரிந்தால் அது மிகப் பெரும் ஊழலாகவே பார்க்கப்படும்.இதை சரிசெய்தால்தான் உண்மையான குடியரசாக உருவாகுமோம். எந்த சமுதாயத்தையும் காயப்படுத்துவதும் என் நோக்கமல்ல. அப்படி காயப்படுத்தியிருந்தால் மிகவும் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications