எல்லை பதற்றத்தைத் தணிக்க முயலும் சர்தாரியின் 'இந்திய லாபி'

ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய ராணுவ வீரர்களைப் படுகொலை தலையை துண்டித்த சம்பவத்தால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டதுடன் பதற்றமான சூழலும் நிலவி வருகிறது. இதனால் இருநாடுகளிடையே இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெற இருந்த நீர்பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இதேபோல் பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரப்பானி ஹாரும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த விருப்பம் தெரிவித்து கருத்துகளை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக இருதரப்பு இடையே பதற்றத்தை தணிக்கும் லாபி ஒன்று செயல்படுவதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அரசாங்கம் நம்பிக்கையூட்டக் கூடிய வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் இந்திய அரசு பேச்சுக்கான ஒப்புதலை தெரிவிக்கும் என்று அந்த லாபி மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications