'2014' குறித்து மோடியுடன் ராஜ்நாத் சிங் தீவிர ஆலோசனை!

டெல்லி வந்த மோடி இன்று ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளதற்காக சிங்குக்கு அவர் பொக்கே கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் 2 தலைவர்களும் 2 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். லோக்சபா தேர்தல், பிரதமர் வேட்பாளர்
உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
சந்திப்புக்குப் பின்னர் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடிக்கு தேசிய அளவில் முக்கியப் பங்கு தரப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ராஜ்நாத் சிங், அதுகுறித்து கட்சித் தலைவர்களுடன் பேசப்படும். அதன் பின்னரே தீர்மானிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து சிங் பேசுகையில், நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார் மோடி. தற்போது நேரில் வந்து வாழ்த்தியுள்ளார். குஜராத் குறித்துப் பேசினோம். லோக்சபா தேர்தல் குறித்துப் பேசினோம் என்றார்.
பின்னர் மோடி பேசுகையில், குஜராத்துக்கு ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜகவால் எப்படியெல்லாம் சேவை செய்ய முடியும் என்பது குறித்துப் பேசினேன். கட்சியை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்பது குறித்துப் பேசினோம். 2014 லோக்சபா தேர்தல் குறித்தும் விரிவாகப் பேசினோம் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications