Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஓபன் சூப்பர் பேட்மிண்டன் போட்டிக்கு ரூ. 1 கோடி... ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஓபன் சூப்பர் பேட்மிண்டன் போட்டிக்கு ரூ. 1 கோடி நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

மாற்றுத்திறனாளிகளிடையே உள்ள விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் வகையில், 2012-2013 ஆம் ஆண்டு முதல் மாற்றுத் திறனாளிகளிடையே மாநில அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுத் தொகை வழங்கிட முதல்வர் ஜெயலலிதா 30 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கிட ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார்.

இந்த போட்டிகளில் கலந்து கொண்டு முதல் இடம் பெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.5,000, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3,000, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2,000 மற்றும் சான்றி தழ்களும் பதக்கங்களும் வழங்கப்படும்.

2012-2013-ம் ஆண்டு முதல் கடற்கரை மாவட்டங்களில் விளையாட்டினை மேம்படுத்தும் பொருட்டு, தமிழகத்தின் பத்து கடற்கரை மாவட்டங்களில் கடற்கரை கால்பந்து, கடற்கரை கையுந்து பந்து மற்றும் கடற்கரை கபாடி விளையாட்டுப் போட்டிகளை நடத்திட முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, பத்து கடற்கரை மாவட்டங்களில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தொடரா மானியமாக ரூ.20 லட்சமும் தொடர் மானியமாக ரூ. 5.00 லட்சமும் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார். இதில் கலந்து கொண்டு முதல் இடம் பெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.3,000 இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2,000 மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படும்.

சென்னை ஓபன் டென்னிஸ் மற்றும் சென்னை ஓபன் ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டிகளைப் போன்று 2013-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சென்னை ஓபன் சூப்பர் இறகுப்பந்து விளையாட்டு போட்டிகளையும் நடத்திட முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்துள்ளார். இப்போட்டிகளை நடத்திட தொடர் மானியமாக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஜவஹர்லால் நேரு பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் பல்வேறு நவீன வசதிகளுடன், 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்டது.

அச்சமயம் அங்கு நிறுவப்பட்ட குளிர்சாதன வசதிகள் மற்றும் ஒளிவிளக்கு வசதிகள், காலத்தினால் பழமையடைந்துவிட்டதால், இவைகளை மாற்றியமைக்கவும், உலகத்தரம் வாய்ந்த ஒலியமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், உரிய நடவடிக்கை எடுக்கவும், இவ்வசதிகளை ஏற்படுத்திட ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+