தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்க்கு வைகோ ஆறுதல்
Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில் தாலுகாவில் திருவேங்கடம் அருகே வரகனூர் கிரமத்தை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (48 ) பயிர்கள் கருகியதால் தற்க்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து அவரது வீட்டுக்கு நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்றார். ஜெகநாதனின் மனைவி ரெங்கலக்ஷ்மி, மகன் அய்யலுசாமி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிதியுதவியையும் அளித்தார்.
இந்த சந்திப்பின்போது குருவிகுளம் ஒன்றியசெயலாளர் சங்கர், நெல்லை மாவட்டச் துனைசெயலாளர் மின்னல் முகமதுஅலி, வரகனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ் கண்னா ஆகியோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications