ஈழத் தமிழரிடம் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த தி. வேல்முருகன் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

Velmurugan
விழுப்புரம்: ஈழத் தமிழர்களிடத்தில் அரசியல் தீர்வு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரத்தில் அக்கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய வேல்முருகன், ஈழத்திலுள்ள தமிழர்களிடம் அவர்களது விருப்பம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். குறைந்தபட்சம் அதற்காகவாவது நாம் போராட வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. காவிரி நதிநீர் விவகாரம், முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனைகளில் சாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழர்களாய் ஓரணியில் திரள்வோம்!

வன்னியர் சங்கத்தை காப்பாற்றப்போவதாக கூறும் ராமதாஸ், மத்திய அமைச்சராக அன்புமணி இருந்தபோது, அவருக்கு நியமிக்கப்பட்ட 41 நேர்முக உதவியாளர்களில் உறவினர்களே அதிகம். ராமதாஸுக்கு எந்த கொள்கையும் கிடையாது. தர்மபுரியில் இரு சமுதாய மக்களையும் மோதவிட்டு அரசியல் லாபமடையப் பார்க்கிறார் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+