இஸ்லாமிய அமைப்புகளுடன் கமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , நடிகர் கமல்ஹாசன் மீண்டும் இஸ்லாமிய அமைப்பினரை அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வரும் பிப்ரவரி மாத முதல் வாரத்தில் மத்திய அரசு அரசிதழில் வெளியிட இருக்கிறது என்றார்.
சி.ஏ. மாணவிக்கு காசோலை
இதனிடையே சி.ஏ. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான பிரேமாவுக்கு எண்ணூர் துறைமுகத்தின் சார்பில் ரூ5 லட்சம் காசோலையை இன்று சென்னையில் ஜி.கே. வாசன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஜி.கே.வாசன், இந்திய மாணவ- மாணவிகளுக்கெல்லாம் எடுத்துக் ட்டுதான் பிரேமா. கடின உழைப்பால் எதையும் சாதிக்கலாம் என்பதை இந்த தமிழ் மங்கை பிரேமா செய்து காட்டியுள்ளார். அவரது சாதனையை தேசமே நிமிர்ந்து பார்க்கிறது. கல்விக் கண் திறந்த காமராஜர் கனவுகள் இன்று நனவாகிறது என்றார்.












Click it and Unblock the Notifications