ராணிப்பேட்டையில் அமைச்சர் முகம்மது ஜான் வீடு முற்றுகை… பரபரப்பு

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் அமைச்சர் முகமதுஜான் வீடு உள்ளது. திடீரென்று அமைச்சரின் வீட்டை இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சிறையில் இருக்கும் அபுதாஹிர் என்பவரை தோல் அழிவுநோய் தாக்கியுள்ளது.இதனால் அவரை சிகிச்சைக்காக பரோலில் விடுதலை செய்யவும் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லவும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் குறித்து பேசிய இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளர் நஸீர் அகமது,நீதிமன்றமே பரோலில் அனுப்புவதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு பரோலில் விட மறுக்கிறது என்றார். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் டெல்லி வரை இப்பிரச்னை கொண்டு செல்லப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அமைச்சரின் வீட்டை நோக்கி வந்த போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications