சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த பி.இ. மாணவிக்கு கத்திகுத்து
சென்னை: சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த பொறியியல் கல்லூரி மாணவியை இரண்டு பேர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். இதில் ஜெயஸ்ரீ படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயஸ்ரீயை கத்தியால் குத்தியது செந்தில் மற்றும் அப்துல் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைப் பிடித்த போலீசார் தாக்குதல் குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications