டெல்லி பலாத்கார வழக்கு- 5 பேர் மீது விரைவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் மீது இன்று விரைவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.தலைநகர் டெல்லியில் 10 நாட்களாக பெரும் போராட்டம் வெடித்தது. இதைத் தொடர்ந்து நீதிபதி வர்மா தலைமையில் பலாத்கார குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்க ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் மீது டெல்லி விரைவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் இன்று பதிவு செய்யப்பட்டன. இவர்கள் அனைவர் மீதும் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் இனி வழக்கு விசாரணை தொடர்ந்து விரைவாக நடைபெறும். இந்த வழக்கில் 6-வது நபர் சிறார் என்று விசாரணை அமைப்பு அறிவித்துவிட்டதால்தான் சிறார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications