மேட்டூர் அணையில் இருந்து 2 டி.எம்.சி. நீரை திறக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையை உடனே திறக்கவும் 2 டி.எம்.சி. நீரை திறந்துவிடவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வரும் 20-ந்தேதிக்குள் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதிழில் வெளியிட உத்தரவிட்டனர்.
மேலும், தற்போது மேட்டூர் அணையில் 9 டி.எம.சி. தண்ணீர் உள்ளது. எனவே, டெல்டா பகுதியில் கருகும் பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து 2 டி.எம்.சி. தண்ணீரை உடனே தமிழக அரசு திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications