ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு- பிப்.8ல் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம்: டெசோ

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: இந்தியாவுக்கு வருகை தரும் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை அணிந்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமையிலான 'டெசோ' அமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கமான டெசோவின் ஆலோசனைக் கூட்டம் மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, திரவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் 18-ந் தேதியும் நாகப்பட்டினத்தில் 19-ந் தேதியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் ஈழத் தமிழரிடத்தில் பொது வாக்கெடுப்பு மேற்கொள்வது தொடர்பான தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவைக் கண்டித்து சென்னையில் கருப்பு உடையுடன் போராட்டம் நடத்தப்படும், டெல்லியில் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக கருத்தரங்கம் நடத்தப்படும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+