மன்மோகன் சிங்கைச் சந்தித்தார் நரேந்திர மோடி-வாசல் வரை வந்து வரவேற்றதாக மகிழ்ச்சி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, முதல்வராகப் பதவியேற்ற பின்னர் டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தி்ல பங்கேற்றார். இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசவில்லை.
இந்த நிலையில் டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் உரையாற்றுவதற்காக அவர் டெல்லி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் பிரதமரை இன்று காலை சந்தித்துப் பேசினார். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது குஜராத் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீணடும் முதல்வராக அமர்ந்ததற்கு மோடிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாநில வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி குறித்த கோரிக்கையை பிரதமரிடம் வைத்தார் மோடி.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வாசல் வரை வந்து என்னை மிகச் சிறப்பான முறையில் பிரதமர் வரவேற்றார். குஜராத் மாநில வளர்ச்சிக்கு அனைத்து விதத்திலும் உதவுவதாக பிரதமர் உறுதி கூறினார். குறிப்பாக, அணை நீர்தேக்கத் திட்டம், எரிவாயு திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரினேன். அதற்கு பிரதமர் உதவுவதாக உறுதியளித்தார். பிரதமரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். புதிதாக அமைந்த அரசுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். அவருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் மோடி.












Click it and Unblock the Notifications