மனைவி, 2 மகன்களைச் சுட்டுக் கொன்று தானும் மாண்ட அமெரிக்க இந்தியர்
Subscribe to Oneindia Tamil
அட்லான்டா: அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களைச் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் வசித்து வந்தவர் சிவேந்தர் சிங் குரோவர்.52 வயதான இவரது மனைவி பெயர் தமஞ்சித் கெளர் குரோவர், இவருக்கு 47 வயதாகிறது. இந்தத் தம்பதிக்கு 5 வயதில் குர்தேஜ் சிங் குரோவர் மற்றும் 12 வயதில் சர்தாஜ் சிங் குரோவர் என இரு மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் ஐந்து பேரும் தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் பிணமாகக் கிடந்தனர். குரோவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களையும் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குரோவர் தனது மனைவியை தலையில் சுட்டும், மகன்களை கழுத்தில் சுட்டும் கொன்றுள்ளார்.












Click it and Unblock the Notifications