எனக்கு மாப்பிள்ளை பிடிக்கலை… திருமணம் முடிந்தபின் எஸ்கேப் ஆன மணப்பெண்
கன்னியாகுமரி: மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி திருமண வரவேற்பில் இருந்து மணப்பெண் பாதியிலேயே ஓடிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்துள்ள சுருளோடு பகுதியை சேர்நதவர் ராஜ்குமார்.இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன் அவரது பெற்றோர் பெண் பார்க்க துவங்கினர். கேரள மாநிலம் உற்றங்கரை பகுதியை சேர்ந்த ஷீஜா என்ற பெண்ணை பேசி முடித்தனர். அதன்பிறகு வெளிநாட்டில் இருந்து ராஜ்குமாரும், ஷீஜாவும் செல்போனில் பேசிக் கொண்டனர். பெற்றோர் திருமண தேதியையும் குறித்தனர். இதன்படி திருமணம் பிப் 4ம் தேதி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே திருமணத்திற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன் ராஜ்குமார் சொந்த ஊர் வந்தார். முறைப்படியான நிச்சயம் நடைபெற்றது. நிச்சயிக்கப்பட்டவாறு பிப்ரவரி 4ம் தேதி கேரள மாநிலம் உற்றக்கடை பகுதியில் உள்ள சர்ச்சில் இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் அன்று மாலை சுருளோட்டில் உள்ள சமூக நலக்கூடத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.
வரவேற்பு விருந்தில் ஊர்மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உற்றக்கடை பகுதியில் இருந்து ஷீஜாவின் உறவினர்கள் சீர்வரிசையுடன் வந்தனர். அவர்கள் சீர் பொருட்களை வழங்கிவிட்டு திரும்பி சென்றனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ராஜ்குமாரின் நண்பர்கள் அவருடன் நின்று போட்டோ எடுத்து கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் ஷீஜா அவரிடம் கூறி விட்டு நைசாக பஸ் நிலையம் நோக்கி ஓட்டம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண்ணை காணாமல் உறவினர்கள் அங்கும் இங்கும் தேடினர். இந்நிலையில் ஒரு பெண் மணக்கோலத்தில் நகைகளை போட்டு கொண்டு ஓடுவதாக வந்த தகவலைஅடுத்து மணப்பெண்ணின் உறவினர்கள் அவரை துரத்தி கொண்டு போய் பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது, தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என கூறினார். இதையடுத்து இருவருது பெற்றோரையும் வரவழைத்து போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.
திருமணம் முடிந்த பின்னர் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி மணப்பெண் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications