திகார் சிறையில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டான்!
அவனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததைத் தொடர்ந்து உடனடியாக தூக்கிலிடப்பட்டான்.
தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 7.56 மணிக்கு அப்சல் குருவுக்கு தண்டனையை நிறைவேற்றியதாக சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஆனால் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட செய்தியை அதிகாரப்பூர்வமாக இன்னும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி இறுதியில் அவனது மனு நிராகரிக்கப்பட்ட தகவலை மத்திய அரசு இன்று வெளியிட்டது.
2001 டிசம்பர் 13-ல் நாடளுமன்றம் மீது தாக்குதல் நடத்த 5 தீவிரவாதிகள் காரில் ஊடுருவினர்.
இந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளுக்கு உதவிய புகாரின் அடிப்படையில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.