அணு உலை குறித்து வெள்ளை அறிக்கை விடாவிட்டால் 15ல் மிகப்பெரிய போராட்டம்: மீனவர் அமைப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கூடங்குளம் அணு உலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் வரும் 15ம் தேதி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர் அமைப்பு சார்பில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடந்தது. இடிந்தகரை ஊர் கமிட்டி தலைவர்கள் ஜான்சன், ராமு ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்ட மீனவ கிராம நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு முத்துநகர் மீனவர் கூட்டமைப்பு தலைவர் சுபாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக்கோரி 550 நாட்களாக போராடி வருகிறோம். இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலை முற்றிலும் செயல் இழந்துவிட்டது என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே அணு உலை குறித்த உண்மை நிலவரத்தை வெள்ளை அறிக்கை மூலம் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் வரும் 15ம் தேதி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர் அமைப்பு சார்பில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+