பெங்களூரில் 4 வயது சிறுமி கற்பழித்து கொலை: பள்ளி அருகே கிடந்த உடல்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் 4 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மடிவாலா பகுதியில் இருக்கும் ரோட்டரி நகரில் 4 வயது சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் அதுவும் கண்கள் வெளியே தள்ளிய நிலையில் ரோட்டரி நகரில் உள்ள அரசு பள்ளி அருகே கிடந்தது.
அந்த வழியாகச் சென்றவர்கள் சிறுமியின் உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications