காஞ்சிபுரத்தில் 4 அரசு பஸ்களில் திடீர் தீ: நாசவேலையா? விபத்தா?
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திடீர் என்று தீப் பிடித்ததில் 4 பேருந்துகள் எரிந்து நாசமாகின.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நிறைய அரசு பேருந்துகள் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு ஒரு பேருந்தில் திடீர் என்று தீ பிடித்தது. இந்த தீ அருகில் உள்ள பேருந்துகளுக்கும் பரவியது. அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இதைப் பார்த்துவிட்டு உடனே தீயணைப்பு நிலையத்திற்கு சென்று தகவல் கொடுத்தனர்.
உடனே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 4 பேருந்துகள் தீயில் கருகி நாசமாகின. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
ஓட்டுநர்கள் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வழக்கமாக நிறுத்தும் இடத்தில் தான் பேருந்துகளை நிறுத்திவிட்டுச் சென்றனர். அவர்கள் அங்கிருந்து கிளம்பிய பிறகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்துக்கு யாரேனும் விஷமிகள் தீ வைத்தார்களா அல்லது விபத்து தானா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications