நான் முதல்வராக இருந்தபோது தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தான் முதல்வராக இருந்தபோது தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த 8ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளிடுவதற்கும், காவிரியிலிருந்து தண்ணீரைப் பெறுவதற்கும் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்óலை என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று 17-2-1970-ல் திமுக ஆட்சியில்தான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதற்காக 8-7-1971-ல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக ஆட்சியின்போது 27-7-1989-ல் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில்தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2-12-1989-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்குமாறு அப்போதைய பிரதமர் வி.பி. சிங்கிற்கு கடிதம் எழுதினேன்.

வி.பி. சிங் கேட்டுக் கொண்டதன்பேரில் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி 24-4-1990-ல் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாகவே 2-6-1990-ல் நான் முதல்வராக இருந்தபோதுதான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 25-6-1991-ல் நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சியில் இந்த இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை.

7-8-1998-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தின் இறுதியில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் பிரதமர் தலைமையில் காவிரி பாயும் நான்கு மாநிலங்களின் முதல்வர்கள் அடங்கிய காவிரி ஆணையம் அமைப்பது என்றும் முடிவானது.

இது திமுக ஆட்சியில்தான் நடந்தது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5-2-2007-ல் திமுக ஆட்சியில்தான் வெளியிடப்பட்டது. இந்தத் தீர்ப்பு தமிழகத்துக்கு பாதகமாக வந்துள்ளதாக அப்போது ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

ஆனால், இப்போது அந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட பாடுபட்டு வருவதாக சொல்லிக் கொள்கிறார். அதற்கு திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், அதனை திமுக எம்.பி.க்கள் தடுத்தார்கள் என்று குற்றம்சாட்டுகிறார். இந்த வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சியாகவே காவிரி பிரச்சனையில் திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருக்கிறார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+