நான் முதல்வராக இருந்தபோது தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 8ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளிடுவதற்கும், காவிரியிலிருந்து தண்ணீரைப் பெறுவதற்கும் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்óலை என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று 17-2-1970-ல் திமுக ஆட்சியில்தான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதற்காக 8-7-1971-ல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக ஆட்சியின்போது 27-7-1989-ல் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில்தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2-12-1989-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்குமாறு அப்போதைய பிரதமர் வி.பி. சிங்கிற்கு கடிதம் எழுதினேன்.
வி.பி. சிங் கேட்டுக் கொண்டதன்பேரில் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி 24-4-1990-ல் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாகவே 2-6-1990-ல் நான் முதல்வராக இருந்தபோதுதான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 25-6-1991-ல் நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சியில் இந்த இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை.
7-8-1998-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தின் இறுதியில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் பிரதமர் தலைமையில் காவிரி பாயும் நான்கு மாநிலங்களின் முதல்வர்கள் அடங்கிய காவிரி ஆணையம் அமைப்பது என்றும் முடிவானது.
இது திமுக ஆட்சியில்தான் நடந்தது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5-2-2007-ல் திமுக ஆட்சியில்தான் வெளியிடப்பட்டது. இந்தத் தீர்ப்பு தமிழகத்துக்கு பாதகமாக வந்துள்ளதாக அப்போது ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
ஆனால், இப்போது அந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட பாடுபட்டு வருவதாக சொல்லிக் கொள்கிறார். அதற்கு திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், அதனை திமுக எம்.பி.க்கள் தடுத்தார்கள் என்று குற்றம்சாட்டுகிறார். இந்த வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சியாகவே காவிரி பிரச்சனையில் திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருக்கிறார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications