சமூக நல்லிணக்கத்திற்காக அரசியலை விட்டு விலக நான் ரெடி, ராமதாஸ் ரெடியா? திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் கொட்டாரம், கீழ்ச்செருவாய், எடைச்செருவாய், பாளையம் ஆகிய ஊர்களுக்கு சென்று தனது கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
தற்போதைய சூழலில் அனைத்து சாதி மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்யது அவசியம். மேலும் நாட்டில் சமூக நல்லிணக்கமும் தேவை. சமூக நல்லிணக்கத்திற்காக நான் அரசியலை விட்டும், பொது வாழ்வில் இருந்தும் விலகத் தயார். சமூக நல்லிணக்கம் ஏற்படும் என்றால் அதற்காக டாக்டர் ராமதாஸ் அரசியலை விட்டு விலகத் தயாரா?
இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், துணை மின் நிலையம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைத்து உரிய நிதி பெற்றுத் தருவேன். பசுமை வீடுகள், ஆடுகள் வழங்குவது உள்ளிட்ட நல்வாழ்வு திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைய அரசிடம் முறையிடுவேன். இப்பகுதியில் கடும் குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications