For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹீரோக்களுக்காக படம் ஓடுவதாகக் கூறுவது தவறு! - இயக்குநர் விக்ரமன்

By Shankar
Google Oneindia Tamil News

Vikraman
சென்னை: ஒரு படம் ஹீரோவுக்காகத்தான் ஓடுகிறது என்பதே தவறான கருத்து. கதை இல்லாவிட்டால் யார் நடித்தாலும் படம் ஓடாது என்கிறார் இயக்குநர் விக்ரமன்.

விக்ரமனின் படங்களென்றால் 100 சதவீதம் க்ளீன் என்டர்டெயின்மென்ட் என்று உறுதியாகச் சொல்லலாம். அப்படி ஒரு நம்பகத்தன்மை இருக்கும்.

அந்த நம்பகத்தன்மை இல்லாமல் போன இரண்டு படங்கள் சென்னைக் காதல், மரியாதை.

அதன் பிறகு விக்ரமனுக்கும் சினிமாவுக்கும் ஒரு சின்ன இடைவெளி வந்துவிட்டது.

இப்போது மீண்டும் தன் பாணியில் புதிய படம் ஒன்றை அவர் இயக்கி வருகிறார். அதுதான் நினைத்தது யாரோ!

இந்தப் படம் குறித்து அவர் கூறுகையில், " என்னுடைய படங்களில் சென்டிமென்ட், காதல், கதை, காமெடி, இசை என எல்லாம் இருக்கும். அதேபோல், இந்த படத்திலும் இருக்கும் என்று சொல்லலாம்... இல்லையென்றும் சொல்லலாம். ‘நினைத்தது யாரோ' முழுக்க முழுக்க காதல்கதை.

இந்தக் கதைக்கு புதுமுகங்கள்தான் சரியாக இருப்பார்கள் என்பதால் புதுமுகங்களைத் தேர்ந்தெடுத்தேன்.

மாஸ் ஹீரோ என்பது முதல் இரண்டு ஷோவுக்கான காரணகர்த்தாவாக இருப்பார்கள்.

ஆனால் எவ்வளவு பெரிய ஹீரோ என்றாலும் கதை இல்லையென்றால் மக்கள் புறக்கணித்துவிடுவார்கள். ஆனால், ஹீரோக்களோ படமே தங்களால்தான் ஓடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்," என்றார்.

English summary
Director Vikraman says that story is the hero in any movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X