குருநானக் கல்லூரியில் தீ… இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் தடங்கல்
சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் இந்தியா - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களின் பயிற்சிப் போட்டியில் சிறிது நேரம் தடங்கல் ஏற்பட்டது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் 22ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்கு பயிற்சி பெறும் வகையில், ஆஸ்திரேலியா லெவன் , வாரிய தலைவர் லெவன் அணிகளிடையே பிப். 12, 13 தேதிகளில் நடந்த 2 நாள் ஆட்டம் டிராவில் முடிந்தது.
கம்பீர் தலைமையிலான இந்தியா ஏ அணியுடன் ஆஸ்திரேலியா லெவன் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம், குருநானக் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இரண்டாவது ஓவரில் பீட்டர் சிடில் பந்து வீசும் போது அந்த வளாகத்தில் இருந்த உடை மாற்றும் அறையில் திடீரென்று தீ பற்றியது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடை பட்டது.