பிஸ்டோரியஸ் வீட்டில் ரத்தக்கறை படிந்த கிரிக்கெட் பேட் கண்டுபிடிப்பு

இதனால் பிஸ்டோரியஸின் காதலி கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பிஸ்டோரியஸ் தனது காதலியான ரீவா ஸ்டீன்கேம்ப்பை காதலர் தினத்தன்று சுட்டுக் கொன்று கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருடன் வந்து விட்டானோ என்று கருதி சுட்டதாக பிஸ்டோரியஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் பிஸ்டோரியஸுக்கும், அவரது காதலிக்கும் இடையே வாக்குவாதம் மூண்டு அதன் பின்னர்தான், பிஸ்டோரியஸ், துப்பாக்கியால் சுட்டதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இதற்கிடையே, ரீவாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. அதில் ரீவாவின் மண்டை ஓடு முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், நசுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போலீஸாரை குழப்பியுள்ளது. மேலும் பிஸ்டோரியஸ் வீட்டிலிருந்து ஒரு ரத்தக்கறை படிந்த கிரிக்கெட் பேட்டும் சிக்கியுள்ளது. எனவே ரீவாவை பிஸ்டோரியஸ் முதலில் பேட்டால் சரமாரியாக அடித்துக் காயப்படுத்தினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கிரிக்கெட் பேட் சிக்கியிருப்பதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த வழக்கில் பிஸ்டோரியஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்குமாம்.












Click it and Unblock the Notifications