கொல்லப்பட்ட 3 பேரின் தலைகளுக்கு காவல் காத்துக் கொண்டிருக்கும் போலீஸ்
நெல்லை: நெல்லை மாவட்டம் புளியங்குடியில் கொலையான 3 பேரின் தலைகளை காவல் நிலையத்தில் வைத்து பாதுகாப்பாக பராமரித்து வருகின்றனராம் புளியங்குடி போலீஸார். இதுதான் இப்போது அந்தப் பகுதியில் படு ஹாட்டாக உலவி வரும் பேச்சாக உள்ளது.
3 தலைகளையும் பெட்டியில் போட்டு பத்திரமாக வைத்துள்ளனராம். நெல்லை மாவட்டம் புளியங்குடியில் கடந்த மாதம் 26ம் தேதி வாசுதேவநல்லூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சடையநேரி கால்வாய் பாலத்தின் அடியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும், பிப்ரவரி 10ம் தேதி இலந்தைக்குளம் கரையோரம் உள்ள தனியார் கிணற்றில் முகத்தில் பலத்த காயத்துடன் 25 வயது வாலிபரும், பிப்ரவரி 15ம் தேதி நெற்கட்டும்செவலில் சாலையோரத்தில் சாக்குமூட்டையில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இவர்கள் மூன்று பேரும் யார் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மூன்று உடல்களும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 3 பேரின் தலைகளும் பெட்டிகளில் அடைக்கப்பட்டு புளியங்குடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த 3 பேரின் தலைகளையும் சென்னையில் உள்ள அரசு தடய அறிவியல் ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்ய அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன்தான் கொண்டு செல்ல முடியும். அதுவரை இந்த தலைகளை போலீசார் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 3 பேரின் போட்டோக்கள் அடங்கிய நோட்டீஸ் தயாரித்து மாநில குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications