மீனவர்களை கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் நாடு திரும்ப அனுமதி
டெல்லி: இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் தொடர்புடைய இரண்டு இத்தாலி கடற்படை வீரர்களும், 4 வாரங்களுக்கு அவர்களின் நாட்டிற்கு சென்று வர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இருவரை சுட்டுக்கொன்றது தொடர்பான வழக்கில், இத்தலி கடற்படை ஊழியர்கள் மஸிமிலானோ லட்டோர் மற்றும் சால்வாடோர் கிரோன் ஆகியோர் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது கொல்லம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது ஜாமீனில் இருக்கும் அவர்கள் கொச்சி ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.
இத்தாலியில் தேர்தல் நடைபெறுவதால் வாக்களிக்க அனுமதி கோரி அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு, தேர்தலில் வாக்களிக்க அனுமதியளிப்பதாக கூறியுள்ளது. இத்தாலி நாட்டு சட்டப்படி தபால் மூலம் வாக்களிக்க முடியாது என்பதால் அவர்களுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் இத்தாலிக்கு மட்டும் சென்று விட்டு மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி விட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த குற்றவாளிகள் ஏற்கனவே கிருஸ்துமஸ் கொண்டாடுவதற்காக இத்தாலி சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications