ஆப்கானிஸ்தானில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு: காபூலை தாக்கும் தாலிபான்கள் சதி முறியடிப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானில் இரண்டு இடங்களில் குண்டுவெடித்ததில் அந்நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் பலியாகினர். மேலும் காபூலில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்த திட்டமிட்டிருந்த தீவரிவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள ஜலாலாபாத் நகரில் உள்ள உளவு ஏஜென்சி அலுவலகம் மீது தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை கொண்டு இன்று மோதினான். இதையடுத்து புலி ஆலம் என்ற இடத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தினான். இந்த 2 தாக்குதல்களில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் பலியாகினர்.
மேலும் தலைநகர் காபூலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது. தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் கார் நிறைய வெடிகுண்டுகளுடன் காபூலில் உள்ள முக்கிய இடத்தில் தாக்குதல் நடத்த வந்தான். ஆனால் அவனை போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டு கார் வெடிகுண்டை செயல் இழக்கச் செய்தனர்.
இந்த தாக்குதல்களை தாங்கள் தான் நடத்தியதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications