For Daily Alerts
Just In
அவதூறு வழக்கில் கருணாநிதிக்கு சம்மன்: இதோடு மொத்தம் 12 சம்மன்
தமிழக அரசு பற்றி திமுக தலைவர் கருணாநிதி அவதூறாக அறிக்கை வெளியிட்டதாகக் கூறி அவர் மீதும், அந்த அறிக்கையை வெளிட்ட முரசொலி ஆசிரியர் மீது அமைச்சர் வைத்திலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு நீதிபதி கலையரசன் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த அவர்
வரும் ஏப்ரல் மாதம் 29ம் தேதி கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கிலும் ஏப்ரல் 29ம் தேதி தான் கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதியின் அறிக்கையை வெளியிட்ட ஆங்கில நாளிதழ் மீதும் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு இதுவரை 12 அவதூறு வழக்குகளில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Comments
English summary
Chennai court has summoned DMK chief Karunaidhi to appear before the court on april 29 in connection with a defamation case.
Story first published: Monday, February 25, 2013, 14:34 [IST]