For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவதூறு வழக்கில் கருணாநிதிக்கு சம்மன்: இதோடு மொத்தம் 12 சம்மன்

By Siva
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்ந்த அவதூறு வழக்கில் வரும் ஏப்ரல் மாதம் 29ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக அரசு பற்றி திமுக தலைவர் கருணாநிதி அவதூறாக அறிக்கை வெளியிட்டதாகக் கூறி அவர் மீதும், அந்த அறிக்கையை வெளிட்ட முரசொலி ஆசிரியர் மீது அமைச்சர் வைத்திலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு நீதிபதி கலையரசன் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த அவர்
வரும் ஏப்ரல் மாதம் 29ம் தேதி கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கிலும் ஏப்ரல் 29ம் தேதி தான் கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியின் அறிக்கையை வெளியிட்ட ஆங்கில நாளிதழ் மீதும் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு இதுவரை 12 அவதூறு வழக்குகளில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

English summary
Chennai court has summoned DMK chief Karunaidhi to appear before the court on april 29 in connection with a defamation case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X