பொட்டு சுரேஷ் கொலை: மு.க.அழகிரி தரப்பை பிளாக் மெயில் செய்யும் ‘அட்டாக்’ கும்பல்?!

Subscribe to Oneindia Tamil

Attack Pandi and Alagiri
மதுரை: மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில் இந்த வழக்கில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதுபோல அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் போலீசில் வாக்கு மூலம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொட்டு சுரேஷ் கொலைக்கு முன்னதாக சென்னை பாண்டிபஜார் ஹோட்டலில் அட்டாக் பாண்டி- அழகிரி சந்திப்பு நடந்ததாகவும், அப்போது பொட்டுவினால் தொந்தரவு... குடும்பத்துக்குள் பிரச்சனை என்று அழகிரி சொன்னதாகவும், அதை அட்டாக் வந்து தன்னிடம் கூறியதாகவும் போலீசில் தெரிவித்துள்ளான் இந்தக் கொலையில் கைதாகியுள்ள அட்டாக்கின் அக்காள் மகளான விஜயபாண்டி.

நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே செய்றேன் என்று அழகிரியிடம் கூறிவிட்டு வந்த அட்டாக், அப்போதே, ஆள் ரெடி பண்ணுங்க என்று தன்னிடம் கூறி, கொலைக்கான ஸ்கெட் போட்டதாக கூறியுள்ளான் விஜயபாண்டி.

அழகிரி, துரை பெயர் லீக்....:

கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு சரணடைந்ததும், அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் அட்டாக் பாண்டியின் 'ட்ரெயினிங்' என்கின்றனர். மு.க.அழகிரி, துரை. தயாநிதியின் பெயரை போலீசிடம் சொல்லலாம் என்று அட்டாக்கிடம் இருந்து தகவல் வந்த பிறகே அவர்கள் போலீசில் இவர்களது பெயரை கூறியிருக்கின்றனர்.

இது அழகிரியை பிளாக் மெயில் செய்யும் முயற்சி என்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள்.

அட்டாக் கேட்ட சத்தியங்கள்

திமுகவில் ஏதாவது ஒரு பதவி, இரண்டு கோடி ரூபாய் பணம், பொட்டு சுரேஷ்க்கு நீங்கள் முக்கியத்துவம் தரக் கூடாது, மதுரை உயர் நீதிமன்றம் எதிரில் இருக்கும் 100 சென்ட் இடப் பிரச்சனையில் நான் தலையிட்டேன். அந்த நேரத்தில் எனக்கு எதிராகப் பஞ்சாயத்து செய்து அந்த லாட்டரி அதிபருக்கு சாதகமாகச் செய்து விட்டனர். அதில் 50 சென்ட் நிலமாவது எனக்கு வாங்கித் தர வேண்டும் என்று 4 முக்கிய நிபந்தனைகளை பாண்டிபஜார் ஹோட்டல் சந்திப்பின் அழகிரியிடம் அட்டாக் விதித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு அழகிரி மறுத்துவிட்டதாகவும், ஜனவரி 31ம் தேதி பொட்டு போட்டுத் தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளான் விஜயபாண்டி.

'காட்டுவாசி' முருகனுடன்:

பொட்டு கொலை வழக்கு அழகிரி, துரை தயாநிதியை மையமாக வைத்து வலம் வர ஆரம்பித்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அட்டாக் பாண்டியை எப்படி வெளியே கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளது மதுரை போலீஸ்.

அட்டாக் பாண்டியுடன் இப்போது 'காட்டுவாசி' முருகன், வில்வதுரை, பிரவீண் ஆகியோர் இருப்பதாக கூறுகின்றனர். அட்டாக் சொத்துக்களின் கை வைத்தால் வெளியே வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவற்றை அடையாளம் கண்டதோடு, பத்திரப் பதிவு அதிகாரிகள் உதவியுடன் சேகரித்து ஆட்சி மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர்.

சொத்துக்கள் மீது கை வைக்க ஆரம்பித்தால் அட்டாக் தானாகவே வெளியே வருவார் என்பது போலீசின் கணிப்பு. அட்டாக் வந்தால் அவர் கொடுக்கும் வாக்குமூலம் எப்படி இருக்கப் போகிறதோ?!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+