ஆ.ராசாவை முன்வைத்து வரிந்து கட்டும் திமுக- எதிர்க்கும் காங்.- ஆதரிக்கும் பாஜக, இடதுசாரிகள்!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு (ஜேபிசி) முன்பு தாம் சாட்சியமளிக்க வேண்டும் என்று முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா விடுத்திருக்கும் கோரிக்கை அரசியல் பூகம்பமாக வெடிக்கக் காத்திருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் சிக்கி சிறைக்குப் போய் தற்போது ஜாமீனில் இருக்கிறார் ஆ.ராசா. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் பற்றி அனைத்துக் கட்சி எம்.பிக்கள் இடம் பெற்றிருக்கக் கூடிய ஜேபிசி எனும் பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணையும் நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் போது அண்மையில் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி ஆஜராகி ஆ.ராசா மீது புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தாம் விளக்க அளிக்க தம்மையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் ஆ.ராசா. ஆனால் அவரை அழைக்க மறுத்துவருகிறது ஜேபிசி.
தம்மை ஜேபிசி முன்பு சாட்சியமளிக்க அழைக்காவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஆ.ராசா மிரட்டலும் விடுத்துள்ளார். இதே ஜேபிசியில் இடம் பெற்றுள்ள டி.ஆர் . பாலுவும் திருச்சி சிவாவும் எப்படியாவது ஆ.ராசாவை சாட்சியம் அளிக்க அழைக்க வைத்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகின்றனர். இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி திமுகவின் கோரிக்கையை கறாராக நிராகரித்துவிட்டது. ஆ. ராசா தம்மை நியாயப்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்துவார் என்கிறது காங்கிரஸ். இதனால் திமுக கடும் கோபத்தில் இருக்கிறது.
மேலும் ஆ.ராசாவைப் பொறுத்தவரையில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்று தாம் எடுத்த நிலைப்பாடு பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களுக்குமே தெரிவிக்கப்பட்டது. ஆனால் தம்மை மட்டுமே குற்றம்சாட்டுகின்றனர் என்று கூறி வருகிறார். இதனால் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் வழக்கில் ஆ. ராசா சிக்க வைத்துவிடுவார் என்பதாலேயே காங்கிரஸ் தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இடதுசாரிகளும் பாரதிய ஜனதா கட்சியும் திமுகவின் நிலைக்கு முழுமையான ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதுபற்றி கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி. சீத்தாரம் யெச்சூரி, ஆ.ராசாவை அழைப்பதன் மூலம் உண்மை தெரியவரும் என்று கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications