பிரபாகரனின் வீட்டை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த வீடு, கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்தது. இந்த வீட்டை தினமும் ஏராளமானோர் வந்து பார்க்கத் தொடங்கினர். குறிப்பாக சிங்களர்கள் அதிகமாக வர ஆரம்பித்தனர்.
இதனை சிங்கள ராணுவத்தால் பொறுக்க முடியவில்லை. கடந்த ஆண்டு அந்த வீட்டை தகர்த்து தரைமட்டமாக்கி விட்டனர். ஆனால், விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடுவு என்ற இடத்தில் தங்கினார் பிரபாகரன்.
அந்த வீடு 2 பகுதிகளாக கொண்டது. அத்துடன் நிலத்திற்கு கீழே பதுங்குக் குழியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் இருந்துதான் பிரபாகரன் வெளியுலகத் தொடர்புகளை மேற்கொண்டு வந்தார். போருக்குப் பிறகு சிங்கள ராணுவத்தினர் இந்த வீட்டை ஆக்கிரமித்தனர். வெளியாட்கள் யாரையும் அனுமதிக்க மறுத்தனர்.
இப்போது அந்த வீட்டை பொதுமக்களின் பார்வைக்கு அனுமதித்துள்ளார்கள். அந்த வீட்டில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விசைப்படகு, போர்க் கருவிகள், சீருடைகள், புலிக்கொடிமற்றும் பிரபாகரன் பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தகவல் தெரிந்ததும் ஏராளமானோர் பிரபாகரன் வீட்டைப் பார்த்துச் செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications