Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா பிறந்தநாள் விளம்பர விவகாரம்: அமைச்சர் வைகைச் செல்வன் மீது அவதூறு வழக்கு

Subscribe to Oneindia Tamil

Vaigai Selvan
நெல்லை: முதல்வர் ஜெயலலிதாவை பாரத மாதாவுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்ததாக அமைச்சர் வைகைச் செல்வன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை நெல்லை நீதிமன்றம் வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்து முன்னனி மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் நெல்லை குற்றவியல் 4வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

கடந்த 27-2-2013 அன்று வெளிவந்த ஒரு வார இதழில் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து வந்த விளம்பரத்தில் பாரத மாதாவின் முகத்தில் ஜெயலலிதாவின் முகத்தையும், காவிக்கொடிக்கு பதில் அதிமுக கொடியையும் வைத்து சித்தரித்துள்ளனர். அந்த விளம்பரம் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் அமைச்சர் வைகைச் செல்வன் மற்றும் தென்சென்னை வடக்கு மாவட்ட பாசறை துணை தலைவர் விஜய் ஆகியோர் சார்பில் வெளியிடப்பட்டது.

பாரத மாதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவருக்கு இணையாக ஜெயலலிதாவை ஒப்பிட்டு விளம்பரம் செய்திருப்பது எங்களின் மத உணர்வை புண்படுத்துவடன் எங்களுக்கு சமுதாயத்தில் அவமதிப்பும், நற்பெயருக்கு களங்களும் ஏற்பட்டுள்ளது. எனவே 295ஏ மற்றும் 500 ஐபிசி பிரிவுகளின் கீழ் அமைச்சர் வைகைச் செல்வன், விஜய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு மாஜிஸ்திரேட் பால்பாண்டியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர் வழக்கை வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+