வீட்டில் தந்தையின் பிரேதம்- துயரோடு பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவன்!

Subscribe to Oneindia Tamil

உத்தமபாளையம்: மரணமடைந்த தந்தையின் பிரேதம் வீட்டில் இருக்க மகனோ பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுத வேண்டிய துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டியை சேர்ந்தவர் பாண்டி பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பஞ்சு. மகள்கள் சித்து, விஜயசாந்தி இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒரே மகன் மணிமாறன், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

பாண்டிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பாண்டி இறந்து விட்டார். குடும்பமே சோகத்தில் மூழ்கியது. தந்தை இறந்த கவலை ஒரு புறம், மறுநாள் காலை பிளஸ் 2 தேர்வு மறுபுறம் என மணிமாறன் தவித்தார்.

கடைசியாக தந்தையின் பிரேதத்தை வீட்டில் வைத்துவிட்டு பிளஸ் 2 தேர்வு எழுத பள்ளிக்கூடம் சென்றார் மணிமாறன். கண்ணீருடன் தேர்வினை எழுதினான். தந்தையில் உடல் மகனின் வருகைக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. மணிமாறன் தேர்வு எழுதிவிட்டு வந்த பிறகு உடலை அடக்கம் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+